1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 25 ஜனவரி 2017 (15:36 IST)

காஷ்மீரில் பனிச்சரிவு, புதைந்தது ராணுவ முகாம்: ராணுவ வீரர்கள் மாயம்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் ராணுவ வீரர்களின் முகாம் ஒன்று புதையுண்டு போனது. 


 

 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுந்தர்பால் மாவட்டம் சோனாமாக் என்ற இடத்தில் இன்று பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. பனிகுன்று ஒன்று சரிந்து ராணுவ முகாம் மீது விழுந்தது. 
 
இதில் ராணுவ முகாம் அப்படியே புதைந்து போனது. இதனால், பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
 
பந்திபோரா பகுதியில் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரோடு புதைந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.