செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 17 ஜூன் 2019 (08:03 IST)

பாகிஸ்தான் மீதான மற்றொரு தாக்குதலில் வெற்றி: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி எப்போது நடந்தாலும் அந்த போட்டியை இந்திய ரசிகர்களும் சரி, பாகிஸ்தான் ரசிகர்களும் சரி ஒரு போட்டியாக பார்ப்பதற்கு பதில் போராகத்தான் பார்த்து வருகின்றனர். வெற்றி பெறும் அணியை அந்நாடே கொண்டாடும் என்பதும் தோல்வி அடையும் அணிக்கு கடும் கண்டனங்கள் எழும் என்பதும் வரலாறு
 
இந்த நிலையில் நேற்று இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 22வது லீக் போட்டியில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி அடைந்தது இந்த வெற்றியை உலகம் முழுவதிலும் உள்ள இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிடும்போது, 'பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதலில் வெற்றி கிடைத்துள்ளதாகவும், இந்த வெற்றிக்காக சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு தனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த சிறப்பான வெற்றியை ஒவ்வொரு இந்தியரும் பெருமையுடன் கொண்டாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை ஒரு போருக்கு இணையாக ஒரு மத்திய அமைச்சரே குறிப்பிட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது