1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By mahendran
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (11:26 IST)

அசாமில் கொட்டித் தீர்க்கும் மழை… பூங்காவில் விலங்குகள் பலி!

அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள பெருக்கு தெருவெங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது.

வடமேற்கு மாநிலமான அஸ்ஸாமில் கனமழைப் பெய்து வருவதால் தெருவெங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்த காண்டாமிருகம் உள்ளிட்ட 24 விலங்குகள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளன.