அமீர் கானுக்கு காவல்துறையினரின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு
பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு, சிவசேனா மிரட்டல் விடுத்துள்தைத் தொடர்ந்து அவருக்கு காவல்துறையினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
சகிப்பு தன்மை குறித்து கருத்து தெரிவித்தார் நடிகர் அமீர் கான் .இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் அதிகரித்து வருகின்றன. அமீர் கானுக் எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், அமீர் கான் "டங்கல்" என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் அரங்குகள் அமைத்து நடந்து வருகின்றது.
இந்த படப்பிடிப்பிற்காக அமீர் கான் அங்கு சென்றுள்ளார். அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குள் சிலர் நுழைய முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்றவர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதனால், படப்பிடிப்பின்போது அமீர் கான் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று படக்குழுவினர் அச்சம் தெரிவித்தனர்.
இந்நிலையில், அமீர் கானுக்கு காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமீர் கான் காருக்கு முன்னும், பின்னும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் வேனில் செல்கின்றனர்.