வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 15 பிப்ரவரி 2018 (13:44 IST)

பக்கோடா கடை வைக்க நிதி தாருங்கள்: மத்திய அமைச்சருக்கு இளைஞர் எழுதிய நக்கல் கடிதம்

கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி பக்கோடா கடை வைத்து தொழில் செய்வது குறித்து பேசிய கருத்துக்கு ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கிண்டலடித்தனர். மேலும் புதுவை முதல்வர் நாராயணசாமி உள்பட  பல காங்கிரஸ் தலைவர்கள் பொதுமக்கள் மத்தியில் பக்கோடா செய்து பிரதமருக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அஸ்வின் மிஸ்ரா என்ற இளைஞர் 'தான் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பதாகவும், பிரதமரின் அறிவுரையின்படி பக்கோடா கடை வைக்க முடிவு செய்துள்ளதாகவும், ஆனால் பக்கோடா வைக்க வங்கியில் கடன் தர மறுப்பதாகவும், இதற்கு நீங்கள் தான் நிதியுதவி செய்து உதவ வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.   

இந்த கடிதத்தின் நகல் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருவதால் பாஜகவினர்களுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.