1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 18 ஜூலை 2021 (12:07 IST)

நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது எப்படி? துவங்கியது ஆலோசனை!

நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது.

 
நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி வரும் 18 ஆம் தேதி அனைத்துக் கட்சிகளுடன் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தும் என முன்னதாக அறிவித்தது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் துவங்கியது. 
 
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்றுள்ளது.