1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: சனி, 20 செப்டம்பர் 2014 (16:23 IST)

விமானத்தில் மாயமான நிர்மலா சீதாராமனின் சூட்கேஸ்

ஏர் இந்தியா விமானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு பயணம் செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சூட்கேஸ் மாயமாகி பின் கண்டெடுக்கப்பட்டது.
ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியாவில் இருந்து மாநாடு நடைபெற உள்ள கெய்ர்ன்ஸுக்கு செல்வதற்காக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏர் இந்தியா விமானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு பயணம் செய்தார்.
 
சிட்னியில் தனது உடைமைகளை சரிபார்த்தபோது அவர் கொண்டுவந்த சூட்கேஸ் காணாமல் போனதை அறிந்த அவர் அது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
 
இதுதொடர்பாக இரு டிவிட்டர் பதிவுகளைப் பகிர்ந்துகொண்ட அவர், அவற்றில், 'சிட்னியில் தரையிறங்கிவிட்டேன். கெய்ர்ன்ஸுக்கு செல்வதற்கான விமானத்தில் பயணிக்கவுள்ளேன். நான் கொண்டுவந்திருந்த சூட்கேஸ் காணவில்லை' என்றும், 'கெய்ர்ன்ஸுக்கு செல்லும் விமானத்தில் இருக்கிறேன். என்னுடைய உடைகள் காணமல்போன சூட்கேஸில் உள்ளன. கெய்ர்ன்ஸில் சேலை வாங்க முடியுமா என தெரியவில்லை. நிலைமை உறுதியற்றதாக உள்ளது' எனவும் தெரிவித்திருந்தார். 
 
இது குறித்து தெரிவித்த ஏர் இந்தியா மேலாளர் மது மதன், காணமல் போன நிர்மலா சீதாராமனின் சூட்கேஸ் கிடைத்துவிட்டதாகவும், அது இன்னும் 6 மணி நேரத்தில் கெய்ர்ன்ஸுக்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.