செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 19 ஏப்ரல் 2017 (11:34 IST)

எங்களுக்கு இதுக்கும் சம்பந்தம் இல்லை: வாண்டட்டாய் வாய்யைவிட்ட நாயுடு!!

மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தமிழகத்தில் நிலவும் குழப்பங்களுக்கும் பாஜக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.


 
 
மேலும் அவர் கூறியதாவது, நாட்டின் எந்த மூலையில் எது நடந்தாலும், அதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டுவது தவறு. சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசு சம்பந்தப்பட்டது. 
 
தற்போது அதிமுக-வில் காணப்படும் குழப்பமான நிலைக்கு மத்திய அரசோ, பா.ஜனதாவோ காரணம் அல்ல. எந்த மாநிலத்தின் உள் விவகாரத்திலும் மத்திய அரசு தலையிடுவது இல்லை. அங்கு மிக மோசமான நிலை ஏற்படாதவரை மத்திய அரசு தலையிடாது எனவும் தெரிவித்தார்.