1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 5 மே 2016 (08:39 IST)

ஹெலிகாப்பட்டர் ஊழல் ரூ 3600 விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி பேச்சு முழு விவரம் (வீடியோ)

ஹெலிகாப்பட்டர் ஊழல் ரூ 3600 விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி பேச்சு முழு விவரம் (வீடியோ)

முக்கிய விவிஐபிகளுக்கு ஹெலிகாப்பட்டர் வாங்கியதில் ரூ 3600 ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி ராஜ்யசாவில் பேசினார்.


 
இந்தியாவில் முக்கிய பிரமுகர்கள் பயன்பாட்டுக்காக இத்தாலியைச் சேர்ந்த பின் மெக்கனிக்கா குழுமத்தின் ஹெலிகாப்டர் பிரிவான அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடமிருந்து 12 சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்க 2010 பிப்ரவரியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
 
ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்திய அரசியல் தலைவர்கள், கடற்படை அதிகாரிகளுக்கு இத்தாலி நிறுவனம் லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது.
 
குறிப்பாக, காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தி மற்றும்   இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து, பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி ராஜ்யசாபாவில் பேசிய பேச்சு முழுவிவரம் இதோ:-