வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : வியாழன், 10 ஜூலை 2014 (11:41 IST)

பிரீத்தி ஜிந்தா நெஸ் வாடியாவுக்கு எதிரான புகைப்பட ஆதாரத்தை காவல்துறையில் கொடுத்தார்

நடிகை பிரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியாவுக்கு எதிரான பாலியல் வழக்கில் முக்கியமான புகைப்பட ஆதாரத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.
 
நடிகை பிரீத்தி ஜிந்தாவும் அவரது முன்னாள் காதலருமான நெஸ் வாடியாவும் தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார்கள். நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதிய போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
 
அப்போது நெஸ் வாடியா தன்னிடம் அத்து மீறி நடந்ததாக பிரீத்தி ஜிந்தா மும்பையிலுள்ள மெரைன் டிரைவ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரையடுத்து நெஸ் வாடியா மீது இந்திய தண்டனை சட்டம் 354 ஆவது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இப்புகார் தொடர்பாக வாடியாவை விசாரித்த காவல்துறையினர் அவரை கைது செய்யாமல் இருக்கின்றனர். ப்ரீத்தி தனது புகார் தொடர்பான வாக்குமூலத்தை சில தினங்களுக்கு முன் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் காவல்துறையினரிடம் கொடுத்தார்.
 
இந்நிலையில் தான் தாக்கப்பட்டது தொடர்பான புகைப்பட ஆதாரத்தை மும்பை காவல்துறையினரிடம் நேற்று (09.07.2014) ப்ரீத்தி வழங்கினார். அவர் அளித்துள்ள புகைப்படத்தில் வாடியா தாக்கியதில், அவரது கையில் ஏற்பட்ட காயங்களின் பதிவுகள் உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் நான்கு புகைப்படங்களை ப்ரீத்தி வழங்கியுள்ளார். பரீத்தி வழங்கிய புகைப்படங்களை தாங்கள் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர், இவ்வழக்கின் முக்கிய துருப்பு சீட்டாக இந்த புகைப்படங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறினார்.