வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2016 (18:52 IST)

யோகா நிகழ்ச்சிக்காக ரூ.1.5 கோடி பெற்ற நடிகை பிபாசா பாசு : வலுக்கும் எதிர்ப்பு

யோகா தினத்தன்று பெங்களூரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகை பிபாசா பாசு ரூ.1.5 கோடி சம்பளம் பெற்ற விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


 

 
பிரபல இந்தி நடிகை பிபாசா பாசு யோகா பயிற்சி பெற்றவர். தினமும் யோகா பயிற்சி செய்யும் பழக்கமுள்ளவர். அதேபோல் சக நடிகைகளுக்கும் அவர் கற்றுக் கொடுத்து வருகிறார். அதனால், யோகா தினத்தன்று, பெங்களூரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு யோகா செய்தார். அவருடன் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கலந்து கொண்டார்.
 
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, அவருக்கு ரூ.1.5 கோடி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதோடு, அவர் பெங்களூரு வந்து செல்வதற்கும், ஆடம்பர ஓட்டலில் தங்குவதற்குரிய செலவை கர்நாடக அரசே ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.
 
இதற்கு பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. அரசு சார்ந்த ஒரு சமூக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு நடிகைக்கு இவ்வளவு பணம் கொடுப்பதா என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.