வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 29 ஜூலை 2015 (09:04 IST)

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்கிறார் நரேந்திர மோடி

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார்.


 

 
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நாளை காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
 
இந்த இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். மேலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்கள் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
 
இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நரேந்திர மோடி தமிழகம் வருவதை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் உறுதிபடுத்தியுள்ளார்.
 
இந்நிலையில் அப்துல் கலாமின் உடல் டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு விமானம் மூலம் வந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.