1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 28 நவம்பர் 2014 (16:18 IST)

கெஜ்ரிவாலுடன் விருந்து உண்ண 20 ஆயிரம் ரூபாய்: மகாராஷ்டிராவில் 91 லட்சம் திரட்டிய ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தலில் போட்டியிடுவதற்காக பல்வேறு முறையில் நிதிகளை திரட்டி வருகிறது. அதில் ஒன்றாக அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இரவு ஒருநாள் விருந்து சாப்பிட ரூ.20 ஆயிரம் கட்டணம் என அறிவித்தது. இதன்மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 91 லட்சம் ரூபாய் நிதியை அந்தக் கட்சி திரட்டியுள்ளது.
 
இதுகுறித்து அந்த கட்சியின் தலைவர் ப்ரீத்தி சர்மா மேனன் கூறியதாவது:-
 
"அரவிந்த் கெஜ்ரிவாலுடன் விருந்து சாப்பிட பணம் என்ற முறையில் நேற்று இரவு மட்டும் நாங்கள் 91 லட்சம் ரூபாய் நிதி திரட்டியுள்ளோம். இதில் 36 லட்சம் ரூபாய் நன்கொடையாகவும், 36 லட்சம் ரூபாய் காசோலை மூலமாவும், மீது பணம் எங்களுடைய கட்சி தொண்டர்கள் வசூலித்த பணமாகும்.
 
மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்டோர் நிதி வழங்கியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஆம் ஆத்மி கட்சி ஆதரவாளர்கள். நிதி வழங்கியதில் இளைஞர்களும், வைர வியாபாரிகள் மற்றும் பாலிவுட் இயக்குனர்கள் போன்றவர்கள்தான் அதிகம். மகாராஷ்டிரா ஆம் ஆத்மி மூலம் அடுத்த இரண்டு மாதங்களில் 5 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த நிதி திரட்டும் நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெறும்" என்றும் அவர் கூறினார்.