1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 20 அக்டோபர் 2014 (14:32 IST)

சமையல் எரிவாயு மானியத்துக்கு ஆதார் எண் கட்டாயமில்லை: மத்திய அரசு அறிவிப்பு

சமையல் எரிவாயு மானியத்தை வங்கிக் கணக்கில் நேரடியாக பெறும் வசதிக்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஆதார் எண் இல்லை என்றாலும் வாடிக்கையாளரது வங்கிக் கணக்கில் மானியம் சேர்ப்பிக்கப்படும் என்றார்.
 
எரிவாயு மானியத்தை வங்கிக் கணக்கில் சேர்க்கும் திட்டம் வரும் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என்று கூறிய ஜேட்லி, முதலில் 15 மாவட்டங்களிலும், பிறகு ஜனவரி 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.