செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 28 ஜனவரி 2019 (20:01 IST)

பெண்ணை அவமதித்த முன்னாள் முதல்வர் ... எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு...

மைசூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினரான சித்தாராமைய்யா இன்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
முன்னர் எம்.எல்.ஏ.வாக இருந்த மைசூர் சாமுண்டீஸ்வரி தொகுதியைச் சேர்ந்த ஒரு பெண் மைக்கை வாங்கி தனது பிரச்சனையை தெரிவித்தார்.
 
ஆனால் அந்தப் பெண் பேசுவதைக் கேட்ட சித்தாராமய்யா சிறிது நேரத்திலேயே  பொறுமை இழந்தவராகி சட்டென்று அவரது கையில் இருந்த மைக்கை பறிக்க முயற்சித்தார்.அப்போது சித்தராமையாவின் கை அந்தப் பெண்ணின் துப்பட்டா மீது பட்டு கீழே விழுந்தது.
 
தன்னிடமிருந்து ஒலிபெருக்கியை பறித்த நிலையிலும் அப்பெண் தன் குறைகளை அவரிடம் வலுவாகத் தெரிவித்தார்.அதற்கு சித்தராமைய்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
 
இந்த வீடியோ காட்சிகள் பல்வேறு சேனல்களில் பலமுறை ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதற்கு பாஜக கட்சி தலைவர்கள் பலரும் பலத்த எதிர்புகள் தெரிவித்து வருகின்றனர்.
 
அதில் முக்கியமாக காங்கிரஸ் தலைவர் ராகுலின் அம்மாவை  (சோனியா காந்தியை தவிர மற்ற பெண்களை காங்கிரஸார் மதிப்பதில்லை என்று தெரிவித்துள்ளனர்.