1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2019 (13:12 IST)

ரூ.3 கோடியில் கார் வாங்க மாணவன் கடத்தல் நாடகம் : கைது செய்த போலீஸார்

உலகளாவிய பொருளாதார சந்தை என்பது விரிவடைந்துள்ளது. இன்று சர்வதேச பொருட்களைக் கூட பணம் இருந்தால் எப்படியும் வாங்கிவிடலாம். அந்த அளவுக்கு இணையம் சேவை வளர்ந்துள்ளது. ஆனால் இணையம் எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளதோ அதேபோல் குற்றசம்பவங்களும் இணையத்தினால் வளர்ந்தபடியே உள்ளது.
அரியானாவில்  குர்காவான் கிருஷ்ணா காலனி  என்ற பகுதியில் வசிப்பவர் சந்தீப் குமார்(19). இஅவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் கடந்ய்ஹ 29 ஆம் தேதி வீட்டில் இருந்து கிரிகெட் அகாடெமிக்குச் சென்றுள்ளான்.
 
ஆனால் திரும்ப வீட்டுக்கு வரவில்லை. இதனால் பதறியடித்த பெற்றோர் சந்தீபை காணாமல் தேடியுள்ளனர். பின்னர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
 
இதுகுறித்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் ரூ. 3 கோடி உயர்ந்த கார் ஒன்றை வாங்குவதாக சந்தீப் தனக்குத்தானே கடத்தல் நாடகம் போட்டுள்ளான்.
 
இது உண்மை போல் இருக்க வேண்டும் என்பதற்காக பிவாடி என்ற இடத்தில் தங்கியுள்ளான். இதனையடுத்து போலீஸார் சந்தீப்பை தொடர்ந்து விசாரிக்கையில் தான் ரூ.3 கோடி மதிப்புள்ள காரை வீட்டில் வாங்கவைப்பதற்காகவே நாடகம் நடித்ததாக கூறியுள்ளதாகத் தெரிகிறது.