வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 18 ஆகஸ்ட் 2018 (09:41 IST)

மகளின் நிச்சயதார்த்த பணத்தை வெள்ள நிவாரணத்திற்கு அளித்த பத்திரிகையாளர்

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக, தனது மகளின் நிச்சயதார்தத்ததை நிறுத்தி அந்த பணத்தை வெள்ள நிவாரணத்திற்கு வழங்கியுள்ளார் ஒருவர் பத்திரிக்கையாளர்.
கேரளாவில் கனமழை பொழிந்து வருகிறது. கேரளாவில் அணை நிரம்பியதால், அவை திறக்கப்பட்டு கேரளாவே வெள்ளக்காடாய் மாறியுள்ளது. 
 
ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து, பேருந்து சேவை, வாகனங்கள் செல்லும் வழித்தடம் என்று அனைத்தும் முடப்பட்டுள்ளது. 
 
மக்கள் பலர் தங்கள் வீடு, உடமை அனைத்தையும் இழந்துள்ளனர். சில இடங்களில் மக்கள் தங்கள் உறவுகளையும் இழந்து தவித்து வருகின்றனர். நிலச்சரிவால் மேலும் பல உயிர்கள் மாய்கின்றன. 
 
மழை, வெள்ளத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. 1,500-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 2,23,139 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரள மக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரள பத்திரிக்கையாளர் ஒருவர், நாளை நடைபெறவிருந்த தனது மகளின் நிச்சயதார்தத்ததை நிறுத்தி, அந்த பணத்தை முதலமைச்சரின் பேரிடர் நிதிக்கு அனுப்பியுள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.