1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 5 செப்டம்பர் 2018 (08:20 IST)

2 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை திருடிய மருத்துவர் கைது

உத்திரபிரதேசத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை ஒரு மருத்துவரே திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 13-ம் தேதி உத்திரப்பிரதேசம் மாநிலம், மீரட்டிலிருந்து ஆக்ராவிற்கு மருந்துகள் கொண்டு செல்லப்பட்டது. ஆக்ராவிற்கு கொண்டு செல்லப்பட்ட மருந்துகளை சரிபார்த்த போது 2 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள் காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் இது சம்மந்தமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க முழு வீச்சில் செயல்பட்டு வந்தனர்.
 
இந்நிலையில் இந்த கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால் அந்த திருடர்களில் அனில் குமார் எனும் டாக்டரும் ஒருவர். அனில்குமார் தான் திருடிய மருந்துப் பொருட்களை சட்டவிரோதமாக மருந்தகங்களில் விற்பனை செய்துள்ளார்.
 
இதனையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.