வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (12:03 IST)

வரதட்சணை கொடுக்காததால் புதுமனைவியை நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த கணவன்

அசாமில் வரதட்சணை கொடுக்காததால் கணவன் தன் புதுமனைவியை நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்குநாள் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நம் நாட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது.
 
அசாமில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஒரு ஜோடியினருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகும் பெண்வீட்டார் பேசிய படி வரதட்சணை கொடுக்காததால் ஆத்திரத்தில் இருந்துள்ளார் புதுப்பெண்ணின் கணவர்.
 
இதனையடுத்து தனது 2 நண்பர்களுடன் வீட்டிற்கு சென்ற கணவன், தனது மனைவியடம் தகராறு செய்துள்ளான். ஒரு கட்டத்தில் அவன் 2 நண்பர்களோடு சேர்ந்து தனது புது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 
இதனை தாங்கிக் கொள்ள முடியாத மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் பெண்ணின் கணவர் மற்றும் அவரது 2 நண்பர்களை கைது செய்த போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர்.