வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (11:13 IST)

பிஸ்கட் வாங்கித் தருவதாக கூறி 6 வயது சிறுமியை சீரழித்த அயோக்கியன்

ஒடிசாவில் 6 வயது சிறுமியை பிஸ்கட் வாங்கித் தருவதாக கூறி, சிறுமியை சீரழித்த மனித மிருகத்தை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகளவில் உள்ளது. 
 
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அவசர சட்டம் மத்திய அனைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்ப்புதல் அளித்துள்ளார்.
 
ஆனாலும் இதற்கெல்லாம் பயப்படாத சில அயோக்கியன்கள் தொடர்ந்து குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல்களை அளித்து வருகின்றனர்.
 
ஒடிசாவை சேர்ந்த 6 வயது சிறுமியான ஷீபா, தனது தாயிடம் பிஸ்கட் வேண்டுமென கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த தாய் குழந்தையிடம் காசு கொடுத்து, கடையில் போய் பிஸ்கட் வாங்கிக்கோ என கூறியுள்ளார்.
 
கடைவீதிக்கு சென்ற சிறுமியிடம், தான் பிஸ்கட் வாங்கித் தருவதாக கூறி, சிறுமி ஷீபாவை மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை அளித்துள்ளான் ஒரு கேடுகெட்ட மனித மிருகம். அத்தோடு நிறுத்தாமல் குழந்தையை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளான். கடைக்கு சென்ற சிறுமி காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், ஊர் முழுவதும் சிறுமியை தேடியுள்ளார்.
பள்ளி வளாகத்திற்குள் சிறுமி ரத்த காயத்தோடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தார். உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் மருத்துவர்கள் சிறுமிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்
 
இதனையடுத்து அந்த அயோக்கியனை கைது செய்த போலீஸார், அவனை சிறையில் அடைத்தனர்.