1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Updated : சனி, 5 செப்டம்பர் 2015 (14:48 IST)

மும்பையில் 2 ரயில்களில் தீ விபத்து

மும்பையில் பணிமனையில் நின்று கொண்டிருந்த 2 ரயில்களில் தீ விபத்து ஏற்பட்டது.
 
மும்பை காண்டிவாலியில் உள்ள ரயில்வே பணிமனையில் பந்தரா - டேராடூண் மற்றும் பந்தரா - வேளாங்கண்ணி ரயில்கள் நேற்று இரவு நின்று கொண்டிருந்தன.
 
அப்போது ஒரு  ரயில்களில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் மளமளவென பரவிய அருகில் நின்றிருந்த மற்றொரு ரயிலுக்கும் பரவியது.
 
தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கொளுந்துவிட்டு எரிந்த தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.
 
இந்த விபத்தில் இரண்டு ரயிலில் இணைக்கப்பட்டிருந்த 8 பெட்டிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.