1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (19:18 IST)

மேட் இன் இந்தியா; 50 கோடியாக உயரும் ஸ்மார்ட்போன் உற்பத்தி: மத்திய அரசு தீவிரம்!!

மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் 2020 ஆம் ஆண்டிற்குள் ஸ்மார்ட்போன் உறிபத்தி 50 கோடியாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளாக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஸ்மார்ட்போன் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. 
 
2014 ஆம் ஆண்டு இந்தியாவில் 6 கோடி ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இது 17 கோடியாக உயர்ந்தது.
 
தற்போதுள்ள நிலையில் ஸ்மார்ட்போன் உற்பத்தி 35% அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, 2020 ஆம் ஆண்டிற்குள் இந்தியாபில் ஸ்மார்ட்போன் உற்பத்தி 50 கோடியாக உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.