ஞாயிறு, 8 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 18 மே 2015 (16:52 IST)

5 தலித் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற ஆதிக்க ஜாதியினர்

உத்தரபிரதேசம் மாநிலத்தில் தலித் பெண்கள் 5 பேரை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக அழைத்து சென்று கொடுமை நடந்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


 

 
உத்தரப்பிரதேச மாநிலம் ஷகாஜாகான்பூர் மாவட்டத்தில் உள்ள ஹாரிவா கிராமத்தில், தலித் சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து  அந்த இளைஞரும் இளம்பெண்ணும் தங்கள் ஊரைவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.
 
இச்சம்பவத்தை அடுத்து பெண்ணின் உறவுக்காரர்கள் தலித் வாலிபரின் உறவுக்கார பெண்கள் 5 பேரை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக இழுத்து சென்றுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. இச்சம்பவம் தொடபாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவத்தில் தொடர்பு உடைய 5 பேரை கைது செய்துள்ளனர். 
 
இச்சம்பவத்தை அடுத்து கிராமத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.