ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 16 ஜூலை 2021 (13:09 IST)

மீட்பு பணியில் விபரீதம்: சிறுமியை மீட்க போராடிய 40 பேர் பள்ளத்தில் விழுந்து பரிதாபம்!

மத்தியப் பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை மீட்கும் போராட்டத்தின்போது, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் தண்ணீரில் விழுந்தனர்.
 
மத்தியப்பிரதேசம் மாநிலம், விதிஷா மாவட்டம் கஞ்ச்பசோதா பகுதியில் நேற்று இரவு 8 வயது சிறுமி கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அதையடுத்து அப்பகுதி மக்கள் பதற்றத்தில் ஓடிவந்து கிணற்றை சுற்றி நின்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 
அதிக பாரம் தாங்காமல் கிணற்றின் சுற்றுச்சுவர் உடைந்து 40க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்து காயமடைந்தனர். இதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 19 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.பி) விநாயக் வர்மா தெரிவித்துள்ளார்.