காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையினருடனான சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
காஷ்மீரின் ஹான்ட்வாராவின் வில்கம் பகுதியில் நுழைந்த தீவிரவாதிகளுக்கும், எல்லை பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று இரவு முதல் துப்பாக்கிச் சண்டை நீடித்தது.
பல மணி நேரம் நீடித்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சண்டையில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.