வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 16 மார்ச் 2017 (22:57 IST)

தந்தை கண்முன் 13,15 வயது மகள்கள் பலாத்காரம்: குஜராத்தில் நடந்த கொடூரம்

இந்தியா முழுவதிலும் கடந்த சில நாட்களாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் இன்று பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தந்தையின் கண்முன்னே அவரது 13 மற்றும் 15 வயதுள்ள இரண்டு மகள்கள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.


 


குஜராத்தில் தாஹோத் மாவட்டத்தில் பெட்டிக்கடை வைத்துள்ள ஒருவர் மீது முன்விரோதம் கொண்ட ஒரு கும்பல் அவரை பழிக்கு பழிவாங்க அவரது இரண்டு மகள்களையும் 13 பேர் கொண்ட கும்பலுடன் ஒரு சொகுசு காரில் கடத்தி சென்றனர். அதே காரில்   இளம்பெண்களின் தந்தையையும் கடத்தினார்கள்.

பின்னர் ஓடும் காரிலேயே இரண்டு மகள்களையும் தந்தை கண்முனே காரில் இருந்தவர்கள் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் குமாத் பாரியா என்பவர் உள்பட 5 பேர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.