வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2017 (15:22 IST)

மாமன் மகன்களால் கர்ப்பமாக்கப்பட்ட 15 வயது சிறுமி!

மாமன் மகன்களால் கர்ப்பமாக்கப்பட்ட 15 வயது சிறுமி!

ஹரியானா மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவர் அவரது மாமன் மகன்கள் இருவரால் தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அந்த சிறுமி தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார்.


 
 
ஹரியானாவின் மஹிப்பூர் கிராமத்தை சேர்ந்த 15 வயதான சிறுமியை அவரது மாமன் மகன்களான 18 வயதான சுரஜ் மற்றும் அஜீட் ஆகிய இரண்டு இளைஞர்கள் தொடர்ந்து பலமுறை பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
 
இந்நிலையில் அந்த சிறுமி தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இது அந்த சிறுமிக்கோ, அவரது பெற்றோருக்கோ இதுவரை தெரியாமல் இருந்துள்ளது. தற்போது சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டதை அடுத்துதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அவரை பரிசோதித்தபோது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனை கேட்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து அந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.