1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 20 ஜூலை 2018 (08:44 IST)

ஃபேஸ்புக் காதல்: 7 மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடிய 15 வயது சிறுமி மீட்பு

ஃபேஸ்புக் காதலால் வீட்டை வீட்டு கடந்த ஜனவரி மாதம் காதலனுடன் ஓடிய 15 வயது சிறுமி ஒருவர் திருப்பூரில் போலீசாரால் மீட்கப்பட்டார். 
 
கடந்த ஜனவரி மாதம் டார்ஜிலிங்கில் உள்ள ஒரு 15 வயது சிறுமி ஒருவர் ஃபேஸ்புக் மூலம் ஒரு இளைஞரிடம் நட்பு கொண்டார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து இருவரும் வீட்டைவிட்டு ஓடிச்சென்றனர்.
 
இந்த நிலையில் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு அந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனாலும் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பதை கடந்த ஏழு மாதங்களாக கண்டுபிடிக்க முடியவில்லை
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த சிறுமி தனது தாயின் செல்போன் எண்ணுக்கு பேசியுள்ளார். இந்த விபரத்தை அவரது தாயார் போலீஸ் அதிகாரிகளிடம் தகவல் கூற உடனடியாக அந்த சிறுமி திருப்பூரில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த சிறுமியும் அவருடைய காதலரும் திருப்பூர் போலீசாரால் மீட்கப்பட்டனர். இந்த விபரம் அறிந்த சிறுமியின் பெற்றோர் திருப்பூருக்கு விரைந்து வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.