1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 6 மே 2020 (22:51 IST)

10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது.. கோவா அரசு அறிவிப்பு

சீனாவில் இருந்து வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இதனால் உலக அளவில் பொருளாதாரம் முடங்கியுள்ளது. பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அனைத்துதொழிகளும், கல்வி நிலையங்களும், பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. மூன்றால் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் மே 17 ல் முடிவடைகிறது.

இந்நிலையில் கோவா மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

வரும்  மே 21ல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வும், மே 20ல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கும் என்று அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.