1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By Siva
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2022 (08:09 IST)

7 மாவட்டங்களில் இன்று இடிமின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை அறிவிப்பு!

rain
7 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இன்று 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
தமிழகத்திலுள்ள விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை சிவகெங்கை உள்பட 7 ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு என தெரிவித்துள்ளது
 
மேலும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது/ இதனையடுத்து மழை பெய்ய வாய்ப்புள்ள 7 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva