வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : திங்கள், 15 ஏப்ரல் 2019 (12:11 IST)

திமுக தலைமை வைத்த செக்; சரண்டரான திருமா... தொண்டர்கள் அப்செட்!

விழுப்புரம், சிதம்பரம் தவிர வேறு எந்த தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என திமுக தலைமை விதித்த கட்டுப்பாட்டால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் அப்செட்டில் உள்ளார்களாம். 
 
அதிமுக கூட்டணியில் அக்கட்சி தலைவர்கள், தங்களது வேனில், வேட்பாளர்கள் மற்றும் அந்த தொகுதியில் உள்ள தங்களது கட்சியின் முக்கிய நிர்வாகிகளை ஏற்றிக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 
 
ஆனால், திமுக கூட்டனியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக விதித்துள்ள கட்டுபாடுகளால் தொண்டர்கள் கவலையில் உள்ளனர். இது குறித்து அக்கட்சி தரப்பில் கூறப்படுவதாவது, 
கூட்டணியில் இருந்தாலும் சில தொகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சியினர் பிரச்சாரத்திற்கு வந்தால், வேறு சமூகத்தினரின் ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்காது என திமுக எண்ணுகிறது. 
 
இதனால், திமுக தரப்பில், விழுப்புரம், சிதம்பரம் என உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் மேற்கொள்ளுங்கள், மீதியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என விடுதலை சிறுத்தை கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளது. 
 
இதையடுத்து திருமாவலவனும் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் என சில தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்து வருகிறாராம். இதனால், கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனராம்.