வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By sivalingam
Last Modified: புதன், 22 மார்ச் 2017 (22:31 IST)

அரவிந்தசாமியுடன் நடித்த த்ரிஷா திடீரென மருத்துவமனையில்? என்ன நடந்தது?

கோலிவுட்டின் முன்னணி நடிகையான நடிகை த்ரிஷா கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல் நாயகியாக நடித்து வருகிறார். இளம் நடிகைகளுக்கு போட்டியாக இப்போதும் அவ்ர் நான்கு படங்களில் நடித்து பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.


 


இந்நிலையில் நடிகை த்ரிஷாவுக்கு திடீரென உணவு ஓவ்வாமை ஏற்பட்டு ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஃபேஸ்புக், டுவிட்டரில் படுவேகமாக செய்தி பரவியது. இதனால் த்ரிஷாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் இந்த செய்தியை த்ரிஷாவின் தாயார் உமாகிருஷ்ணன் மறுத்துள்ளார்., மலேஷியாவில் ‘சதுரங்கவேட்டை-2 ’படப்பிடிப்பில், அரவிந்தசாமியுடன், த்ரிஷா நடித்து வருவதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வந்த தகவல் வெறும் வதந்தி என்றும் அவர் கூறியுள்ளார்.

மலேசியாவில் அரவிந்தசாமியுடன் நடித்து கொண்டிருக்கும் த்ரிஷாவை ஒருசில விஷமிகள் ஐதராபாத் மருத்துவமனையில் இருப்பதாக வதந்திகள் பரப்பியுள்ளனர் என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.