1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Mahalakshmi
Last Modified: சனி, 2 மே 2015 (14:37 IST)

மும்பை வெற்றி: ராயுடுவை பாராட்டிய ரோகித் சர்மா

நேற்றைய லீக் ஆட்டத்தில் மும்பை அணியின் வீரர் ராயுடு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியதற்கு கேப்டன் ரோகித் சர்மா தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
8 ஆவது ஐபிஎல் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணி 8 ரன் வித்தியாசத்தில் பரபரப்பு வெற்றியை பெற்றது.
 
இந்நிலையில் வெற்றி குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், களத்தில் அதிகமான இலக்கை எட்டியதே வெற்றிக்கு வித்திட்டது என்றார். மேலும் நேற்றைய ஆட்டத்தில் ராயுடுவின் ஆட்டதிறன் மிக அற்புதமாக இருந்தது. மேலும் சரியான தருணத்தில் அணி எழுச்சி கண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
 
மேலும் இந்த வெற்றி மூலம் மும்பை அணி தனது 3 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.