1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 ஜூன் 2021 (23:39 IST)

தலை வலியை தீர்க்கும் வெந்நீர் வைத்தியம்

மனிதர்களுக்கு ஏற்படும் தலை வலியை சாதாரண வெந்நீர் குணமாக்கும் வல்லமை கொண்டது.
 
சிலருக்கு அடிக்கடி தலை வலி வரும். மேலும் சிலருக்கு எப்போது பார்த்தாலும் தலை வலிப்பதாக கூறுவார்கள். அவர்களுக்காகவே, இயற்கை வைத்தியம் கைகொடுத்துள்ளது.
 
தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்.