1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் ஓர் அற்புதமான ஃபேஸ் பேக்

வெள்ளையாக மாறுவதற்கு யாருக்கு தான் விருப்பம் இருக்காது. ஒவ்வொருவரும் தாங்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று தான் விரும்பு கடைகளில் விற்கப்படும் கண்ட க்ரீம்களை தினமும் வாங்கிப் பயன்படுத்தி வருகிறார்கள்.



அவ்வாறு க்ரீம்களைப் பயன்படுத்துவதால் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, விரைவிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடும். ஆனால் சரும நிறத்தை அதிகரிக்க இயற்கை வழிகளை நாடினால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில்  உள்ள பிரச்சனைகள் நீங்கி, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.
 
மாதுளை தோல் ஃபேஸ் பேக் தயார் செய்ய:
 
மாதுளையை சாப்பிட்ட பின், அந்த தோலை தூக்கி எறியாமல், சிறு துண்டுகளாக்கி வெயிலில் 2-3 நாட்கள் உலர்த்தி, பின்  அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு அடைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
மாதுளை பொடி 1 டேபிள் ஸ்பூன், தேன் 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு 2-3 துளிகள், தயிர் 1 டேபிள் ஸ்பூன், தக்காளி சாறு  1 டேபிள் ஸ்பூன், பால் 2 டேபிள் ஸ்பூன். செய்முறை: மாதுளை பொடியுடன் தேன் சேர்த்து கலந்து பின் தயிர், பால், தக்காளி  சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
 
அவ்வாறு கலந்து வைத்துள்ள பேஸ்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ  வேண்டும். பின்பு மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக்குவதோடு, அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி சருமத்தின் நிறத்தை உடனடியாக அதிகரித்து வெளிக்காட்டும்.