1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (10:33 IST)

50 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ்: மும்பையில் அதிரடி!!

நாட்டின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி-யில் மும்பை வியாபாரி ஒருவர் 50 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்துள்ளார். 


 
 
இந்தியாவில் பிரபல நடிகர்கள் கூட 2 கோடி ரூபாய் வரையிலான பென்ஷன் திட்டத்தை மட்டும் எடுத்துள்ள நிலையில் மோடியின் அறிவிப்பால் இந்த வியாபாரி 50 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்துள்ளது வர்த்தகச் சந்தையில் அதிர்வுகளை எழுப்பியுள்ளது.
 
மும்பை வியாபாரி ரியல் எஸ்டேட் துறையில் இருப்பதாகவும், அவர் ஜீவன் அக்ஷய் திட்டத்தில் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிந்துள்ளது.
 
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் பல முக்கிய வியாபாரிகள், அரசு தலைவர்கள் எனப் பலதரப்பினர் இன்சூரன்ஸ் திட்டத்தில் அதிகத் தொகையை முதலீடு செய்வது இயல்பு. 
 
இந்தியா முழுவதும் இத்திட்டத்தின் கீழ் சுமார் 2,300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.