1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2015 (13:02 IST)

புதிய 5 ரூபாய் நாணயம்: ரிசர்வ் வங்கி

மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் 125 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதிய 5 ரூபாய் நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
 
இதுகுறித்து ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்றிருப்பது, மறைந்த பிரதமர் நேருவின் 125 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதிய 5 ரூபாய் நாணயம் வெளியிடப்படும். 
 
மேலும் நாணயத்தில் நேருவின் உருவப்படம், அசோகா தூணின் சிங்க முகம், சத்யமேவ ஜெயதே ஆகியவை பொறிக்கப்படும். புதிய நாணயத்தின் விட்டம் 23 மில்லி மீட்டர் கொண்டதாகவும், 5 என்ற எண்ணும் இடம் பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.