பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 19 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை மாதம் இரண்டு முறை மாற்றி அமைத்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் அமைக்கப்படுகின்றது.
நேற்று தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 ரூபாய் 19 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.61.32க்கு விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் லிட்டருக்கு 1 ரூபாயும் உயர்ந்து ரூ.50.49 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 98 பைசாவும் உயர்த்தப்பட்டது.
டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.59.68 ல் இருந்து ரூ.61.87 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.48.33 ல் இருந்து ரூ.49.31 ஆகவும் உயர்ந்துள்ளது.
மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.65.79 ல் இருந்து ரூ.67.96 ஆகவும், டீசல் ரூ.55.06 ல் இருந்து ரூ.56.09 ஆகவும் உயர்ந்தது.
கொல்கத்தாவில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.63.76 ல் இருந்து ரூ.65.48 ஆகவும், டீசல் ரூ.50.75 ல் இருந்து ரூ.51.58 ஆகவும் உயர்ந்தது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.