1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 15 ஜூன் 2017 (10:26 IST)

எல்ஐசி-யின் புதிய ஓய்வூதிய திட்டத்தை பற்றி தெரியுமா?

ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்ஐசி புதிய ஓய்வூதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு பிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.


 
 
இந்தப் திட்டத்தின் மூலமாக 60 வயதிற்கு மேலான மூத்த குடிமக்களுக்கு 10 வருடங்களுக்கு 8 % வரை வட்டி உறுதியாகக் கிடைக்கும். 
 
குறிப்பாக பிற ஓய்வூதிய திட்டங்களின் வட்டி விகிதம் குறைந்தாலும் இந்தத் திட்டத்தின் வட்டி விகிதம் நிரந்தரமானதாக இருக்கும். இது ஒரு அரசு மானியம் வழங்கும் திட்டமாகும்.
 
பிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா திட்ட பாலிசியை ஆஃப்லைன் மூலமாகவும் அல்லது www.licindia.in என்ற இணையதளம் மூலமாகவும் பெறலாம்.
 
இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்கள் கண்டிப்பாக 60 வயதினை பூர்த்திச் செய்து இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.