திங்கள், 15 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2017 (10:23 IST)

பிஎஸ்என்எல் பணமில்லா பரிவர்த்தனை: கைகோர்க்கும் மொபிவிக்!!

பிஎஸ்என்எல் பணமில்லா பரிவர்த்தனை: கைகோர்க்கும் மொபிவிக்!!
மொபிவிக் வால்ட் நிறுவனமும் பிஎஸ்என்எல் நிறுவனமும் இணைந்து புதிய சேவை ஒன்றை இந்தியாவில் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.


 
 
பிஎஸ்என்எல் நிறுவனம் அதிகபடியான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தற்போது பிஎஸ்என்எல், மொபிவிக் வால்ட் நிறுவனத்துடன் இணைந்து பேடிஎம் போன்ற சேவையை வழங்கவுள்ளது.
 
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ரீசார்ஜ்கள், பில் செலுத்துதல் ஷாப்பிங் மற்றும் பஸ் முன்பதிவு போன்ற சேவைகளை எளிதில் செய்ய இந்த மொபிவிக் வால்ட் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
 
இந்த சேவையில் பணமில்லா பரிவர்த்தனை ஊக்கவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை வெற்றி பெரும் வகையில், பேடிஎம் போன்ற வாலட் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்படக்கூடும் என தெரிகிறது.