1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (20:57 IST)

4 மடங்கு அதிகமாகும் பிராட்பேண்ட் இணையத்தின் வேகம்

இந்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தற்போது உள்ள பிராட்பேண்ட் வேகத்தை 4 மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.


 

 
தற்போதைய பிராட்பேண்ட் வேகம் குறைவாகவும், டவுன்லோடு செய்வதற்கு அதிக நேரமும் எடுத்துக்கொள்வதால் பிராட்பேண்ட் வேகத்தை 4 மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:-
 
தற்போது இந்தியா முழுவதும் நெட்வொர்க் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச இணைய வேகம் தற்போது 512 கேபிபிஎஸ் ஆக இருக்கிறது. இதன் வேகத்தை 4 மடங்கு உயர்த்தி 2 எம்பிபிஎஸ் வரை அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் தொலை தொடர்பு வடிக்கையாளர்களின் எண்ணிக்கை அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 20% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.