1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 29 ஆகஸ்ட் 2015 (08:32 IST)

2 ஆவது, 4 ஆவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மாதந்தோறும் 2 ஆவது மற்றும்  4 ஆவது சனிக்கிழமை அனைத்து வங்கிகளுக்கும் பொது விடுமுறை விடப்படுவதாக ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
 
வங்கி ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, மாதத்தின் 2 ஆவது மற்றும் 4 ஆவது சனிக்கிழமைகளை பொது விடுமுறையாக அறிவிக்க மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்னர் ஒப்புதல் தெரிவித்தது.
 
இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து இந்த அறிவிப்பு அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாக அறிவித்தது.
 
அதன்படி, பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள், உள்ளூர் வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் மாதத்தின் 2 ஆவது மற்றும் 4 ஆவது சனிக்கிழமைகள் பொது விடுமுறை விடப்படுகிறது.
 
மேலும், மாதத்தின் மற்ற சனிக்கிழமைகளில், வங்கிகள் முழு வேலைநாளாக செயல்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.