வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 18 ஜூலை 2017 (19:28 IST)

84-க்கும் கொடுப்போம் 30-க்கும் கொடுப்போம்: வரிந்து கட்டும் ஏர்செல்!!

ரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியா ஏர்டெல், வோடோபோன் சலுகைகளை அறிவித்து வந்த நிலையில், ஏர்செல் தற்போது தனது ஆட்டத்தை துவங்கியுள்ளது.


 
 
கடந்த வாரம் ஏர்செல் புதிய சலுகையின் படி வாடிக்கையாளர்களுக்கு ரூ.348 விலையில் 84 ஜிபி டேட்டா (தினமும் 1 ஜிபி), 84 நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
 
தர்போது தனது அடுத்த சலுகை குறித்த அறிவிப்பை ஏர்செல் வெளியிட்டுள்ளது. அந்தவகையில் ஏர்செல் நிறுவனம் ரூ.333 விலையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. 
 
இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 30 ஜிபி 3ஜி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா பயன்பாட்டிற்கு   எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை.