1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Dinesh
Last Updated : திங்கள், 4 ஜூலை 2016 (13:56 IST)

சுவாதியை கொலை செய்தது எப்படி?: ராம்குமாரை நடித்து காட்ட காவல்துறையினர் திட்டம்

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் சுவாதியை கொலை செய்தது எப்படி என்று ராம்குமாரை நடித்து காட்ட வைக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது.


நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24ம் தேதி மென்பொரியாளர் சுவாதியை ராம்குமார் என்பவர் கொடூரமாக படுகொலை செய்து அரிவாளை சம்பவ இடத்தின் அருகிலேயே போட்டுவிட்டு சென்றார். ஆனால் அரிவாளில் ராம்குமாரின் கைரேகை இல்லை. எனவே, அரிவாளை ஆதாரமாக வைத்து கொலையாளி ராம்குமாருக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியாது. தற்போது, அவர்களுக்கு கிடைத்துள்ள ஒரே ஆதாரம் ரயில்வே பகுதியை சுற்றியிருந்த வீடியோ பதிவுகளும், ராம்குமார் தங்கியிருந்த அறையில் பறிமுதல் செய்யப்பட்ட ராம்குமாரின் ரத்தம் படிந்த சட்டையும்தான். மேலும், வேறு ஏதாவது தடயம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், காவல் துறையினர் கொலை வழக்கில் கைது செய்ய வந்தபோது, தற்கொலைக்கு முயன்று பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்ட ராம்குமாரின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் இருப்பதால், நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் சுவாதியை கொலை செய்தது எப்படி என்று அவரை நடித்துக் காட்ட வைக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.