வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 14 ஏப்ரல் 2014 (12:42 IST)

ஐபிஎல் கோப்பையை வெல்வோம் - கோலி

ஐபிஎல் கோப்பையை வெல்வோம் என்று பெங்களூர் அணியின் கேப்டன் கோலி கூறியுள்ளார்.
 
7 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் (16 ஆம் தேதி) அபுதாபியில் தொடங்குகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியாவின் முன்னணி வீரர் வீராட் கோலி தலைமையில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடுகிறது.
 
இந்த முறை கோப்பையை வெல்வோம் என்றும், பெங்களூர் அணி வலிமையாக உள்ளது என்றும் கோலி தெரிவித்தார்.
 
அவர் கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் கோப்பையை வெல்ல முயற்சிகிறோம். இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்வோம். பெங்களூர் அணி வலிமையாக இருக்கிறது. இந்த தடவை அணியில் அனுபவம் மற்றும் இளமை என சிறந்த கலவையாக உள்ளது. மேலும் திறமையாக சில வீரர்களும் வந்து உள்ளனர்.
 
அதை சரியாக பயன்படுத்தி கொள்ள முயற்சி செய்வோம். இந்த ஆண்டு பெங்களூர் அணியின் ஆண்டாக இருக்கும் என நம்புகிறேன். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, வீரர்கள் ரிலாக்சாகவும், உற்சாகமாகவும் விளையாட உதவிகரமாக இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் நெருக்கடிக்கு மத்தியில் விளையாடி விட்டு வரும் வீரர்கள் ரிலாக்ஸ் ஆகி விடுவார்கள் என்று அவர் கூறினார்.