1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 4 மார்ச் 2015 (10:40 IST)

உலகக் கோப்பை: ஐக்கிய அரபு எமிரேட்சை பந்தாடியது பாகிஸ்தான் 339 / 6

இன்றைய உலகக் கோப்பையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராண ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் பொறுப்பாக செயல்பட்டு எதிரணிக்கு கடுமையான இலக்கை நிர்ணயித்துள்ளனர்.
உலக கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். தொடக்கத்தில் பாகிஸ்தான் அணி் விக்கெட்டை இழந்தாலும் பின் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தியது. ஜம்ஷெட் 4 ரன்களில் வெளியேறினார். பின் இணைந்த ஷேசாத், சோகைல் ஜோடி நேர்த்தியாக விளையாடி ரன்களை சேகரித்தனர். 
 
அசத்தல் ஆட்டத்தை வெளிபடுத்திய ஷேசாத் 93 ரன்களில் ரன் அவுட் ஆனார். பின்னர் சோகைலும் 70 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் வந்த மக்சூட் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி 45 ரன்னில் அவுட் ஆனார். பொறுப்பாக விளையாடிய கேப்டன் மிஸ்பா 65 ரன்கள் எடுத்தார். பின் உமர் அக்மல் 19 ரன்களில் ஏமாற்றினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டு இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்தது. மேலும் அப்ரிதி 21 ரன்கள்,  ரியாஸ் 6 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.