செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 29 மார்ச் 2018 (12:45 IST)

பந்து சேதப்படுத்திய விவகாரம்- ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய வார்னர்

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

 
 
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய  அணியின் தொடக்க வீரர் பேன்கிராப்ட் பீல்டிங் செய்த போது ஸ்மித் மற்றும் வாரனர் உதவியுடன் பந்தை பொருள் ஒன்றால் சேதப்படுத்தி உள்ளார். ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டார். 
 
இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ,பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு விளையாட தடை, கேப்டன் பதவி ஏற்க இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. மேலும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் விளையாட தடை விதித்து உத்தரவிட்டது.
 
இந்த விவகாரத்தில் வார்னர் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஆஸ்திரேலியா மற்றும் உலகம் முழுவதுமுள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும், நான் சிட்னிக்கு செல்கிறேன். கிரிக்கெட்டின் பெயரை கெடுக்கும் வகையில் தவறுகள் நடந்து விட்டன. எனது தவறுக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.