வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (13:40 IST)

உண்மையான சூப்பர் ஸ்டாராக கோலி மிளிர்வார் - பாய்காட் புகழாரம்!

இந்திய அணியின் புதிய சூப்பர் ஸ்டாராக ஏற்கனவே ஆகிவிட்ட விராட் கோலி கிரிக்கெட் உலகில் உண்மையான சூப்பர் ஸ்டாராக உருமாறுவார் என்றும் அதற்கான தடயங்கள் இருப்பதை தான் காண்பதாகவும் ஜெஃப்ரி பாய்காட் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரபல கிரிக்கெட் இணையதளத்தின் கேள்வி பதில் பகுதியில் ஏ.பி. டிவிலியர்ஸையும் விராட் கோலியையும் ஒப்பிடுமாறு கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பாய்காட் கூறியதாவது:

ஏ.பி. டிவிலியர்ஸின் பேட்டிங் எனக்கு ரொம்ப பிடித்தமானது. யாருக்குத்தான் பிடிக்காது. அபூர்வமனா ஒரு பேட்ஸ்மென் அவர். யார் நம்பர் 1 என்பதெல்லாம் கடினமான கேள்விகள். அதை தீர்மானம் செய்து என்ன காணப்போகிறோம்.
யார் சிறந்தவர் நம்பர் 1 என்பதெல்லாம் சொந்த அபிப்ராயங்களே. 
 
ஆனால் கோலி சமீப காலங்களாக உயர்தார கிரிக்கெட் திறனை வெளிப்படுத்தி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கோலி புதியவர் இருப்பினும் விலை மதிப்பற்ற சில இன்னிங்ஸ்களை அவர் அதற்குள் விளையாடிவிட்டார்.
 
அவர் நிச்சயம் உண்மையான சூப்பர் ஸ்டாராக உருமாறுவார் என்பதற்கான தடயங்கள் இப்போது தெரிகிறது. 
 
அவரிடம் கிரிக்கெட் மீதான பற்றார்வம், உணர்ச்சிப்பெருக்கு கூடுதலாக உள்ளது. சில வேளைகளில் இது வரம்பு மீறி சென்றாலும் அவரிடம் உள்ள இந்த குணம் எனக்கு பிடித்திருக்கிறது.  மேலும்...

ஜோகன்னஸ்பர்கில் தென் ஆப்பிரிக்காவின் சிறந்த பந்து வீச்சிற்கு எதிராக அவரது பேட்டிங் அசத்தலாக அமைந்தது.
அடுத்து இங்கிலாந்தில் அவர் டெஸ்ட்போட்டிகளில் நிரூபிக்கவேண்டும், பிறகு ஆஸ்ட்ரேலியாவுக்கு எடிரகா மிட்செல் ஜான்சன் அன்ட் கோ-விற்கு எதிராக தன்னை நிரூபிக்கவேண்டும். அனைத்து நாடுகளிலும் திறமையை வெளிப்படுத்தினால்தான் உலக கிரிக்கெட்டில் அவரது பெயர் நீங்கா இடம்பெறும். உள்நாட்டில் மட்டும் ஸ்கோர் செய்வது பயன் தராது.
 
நான் நினைக்கிறேன், கோலி நிரூபிப்பார் என்று. கோலி இப்போதைக்கு சிறப்பாக விளையாடுவதாகவே நான் கருதுகிறேன், டிவிலியர்ஸ் ஒரு அனுபவ வீரர்.
 
இவ்வாறு கூறினார் ஜெஃப் பாய்காட்.