1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 25 ஜூன் 2015 (18:01 IST)

தாக்கப்பட்ட சச்சினின் தீவிர ரசிகருக்கு விராட் கோலி, சுரேஷ் ரெய்னா ஆறுதல்

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது போட்டியின்போது தாக்கப்பட்ட இந்திய ரசிகர் சுதிர் கவுதமை விராட் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
 

 
இந்தியா - வங்கதேசம் இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டி முடிந்த பிறகு, மைதானத்தை விட்டு வெளியேறிய சுதிர் கவுதமை திடீரென சில வங்கதேச ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.
 
உடனே அங்கிருந்த  காவல்துறையினர் அவரை மீட்டு ஒரு ஆட்டோவில் பாதுகாத்தனர். எனினும் வங்கதேச ரசிகர்கள் ஆட்டோவை கற்களால் தாக்கினர். இத்தாக்குதல் காரணமாக சுதிர் கவுதமிற்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
 
இந்நிலையில், பயிற்சி மேற்கொண்டிருந்த இந்திய வீரர்களை சந்திக்க சுதிர் கவுதம் வந்துள்ளார். அப்போது இந்திய அணியின் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் சுதிரை சந்தித்து தாக்குதல் சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளனர்.