வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 19 நவம்பர் 2020 (11:14 IST)

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் ஒருவருக்கு கொரோனா… இருவர் தனிமைப்படுத்தல் – அதிர்ச்சி தகவல்!

இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இங்கிலாந்து அணி இம்மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று 3 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்காக வீர்ரகளுக்கு இடையேயான பயோ பபுள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு வீரருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த வீரரும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இரு வீரர்களும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இதை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமே அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதித்த வீரர் யார் என்றும் தனிமைப்படுத்தப்பட்ட 3 வீரர்கள் யார் என்பதையும் அறிவிக்க மறுத்துள்ளது.